படிப்பை முடித்த பலருக்கும் அரசு துறையில் வேலைவாய்ப்பு என்பது கனவாக இருக்கும். இந்த கனவை நனவாக்க இதோ உங்களுக்கான சிறப்பான வாய்ப்பு. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணபித்து பயன் பெறலாம்.
1. ரயில்வேயில் வேலை: ஆர்ஆர்பி ஜேஇ வேலை வாய்ப்பு 2019.
காலியிடங்கள்: 1, 847
விண்ணப்பிக்க கடைசி நாள்- ஜனவரி 31
ரயில்வே துறையில் வேலை வாய்ப்பாக்கான (RRB) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் பொறியாளருக்கு 13, 847 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க 10 நாட்கள் மட்டுமே உள்ளன.
இதற்கு விண்ணப்பதாரர்கள் 2 வகையாக தேர்வுகளை எழுத வேண்டும். முதல் கட்டம் கணினி அடிப்படையிலான டெஸ்ட் (CBT), இரண்டாம் நிலை CBT, மற்றும் ஆவணம் சரிபார்ப்பு / மருத்துவ பரிசோதனை பொருந்தும். CBT களின் அடிப்படையில், தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்யப்படும்.
2. இந்திய ரிசர்வ் வங்கி:
விண்ணப்பிக்க கடைசி நாள்- ஜனவரி 30
இந்திய ரிசர்வ் வங்கியில் ஜூனியர் பொறியாளர் சிவில் மற்றும் எலக்ட்ரிக் பொறியாளர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியானார்கள் ஜனவரி 30 ஆம் தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
3. தேசிய பாதுகாப்பு அகாடமி: யுபிஎஸ்சி என்டிஏ 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 4
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.upsc.gov.in வலைத்தளத்திற்கு சென்று விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி பிப்ரவரி 4 .
5. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா:
விண்ணப்பிக்க கடைசி நாள் - பிப்ரவரி 11
ஜனவரி 22 முதல் பிப்ரவரி 11, 2019 வரை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன்
மொத்த 15 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணபிக்கலாம்.